சிரியாவில் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா

October 27, 2023

கிழக்கு சிரியாவில் உள்ள இரண்டு இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.அமெரிக்கா மத்திய கிழக்கு கடற்பகுதி, ஈராக் மற்றும் சிரியாவில் தனது துருப்புகளை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுத குழுவினர் அமெரிக்க துருப்புகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர். கடந்த 17ஆம் தேதி இது போன்ற ஒரு தாக்குதலை அமெரிக்க துருப்புகள் மீது நடத்தினர். இந்த தாக்குதலின் போது அமெரிக்க ஏஜென்ட் ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 21 பேர் […]

கிழக்கு சிரியாவில் உள்ள இரண்டு இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.அமெரிக்கா மத்திய கிழக்கு கடற்பகுதி, ஈராக் மற்றும் சிரியாவில் தனது துருப்புகளை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுத குழுவினர் அமெரிக்க துருப்புகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர். கடந்த 17ஆம் தேதி இது போன்ற ஒரு தாக்குதலை அமெரிக்க துருப்புகள் மீது நடத்தினர். இந்த தாக்குதலின் போது அமெரிக்க ஏஜென்ட் ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 21 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இதற்கு பதிலடி தரும் விதமாக கிழக்கு சிரியாவில் உள்ள இரண்டு இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி எனவும் இதற்கும் ஹமாஸ் -இஸ்ரேல் போருக்கும் தொடர்பு ஏதும் கிடையாது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடைபெற்றது குறித்து ஈரானின் தலைவர் அலி கம்யூனிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடென் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu