காலிஸ்தான் பிரிவினைவாதியை கொல்ல இந்தியா திட்டம் - அமெரிக்கா உறுதி

December 1, 2023

நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவரை இந்தியா கொல்ல திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிகழ்வு, நிஜார் கொலை வழக்கில் கனடாவின் குற்றச்ச்சாட்டை உறுதி செய்வது போல் அமைந்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று தெரிவித்துள்ளார். கடந்த வாரம், குர்பந்த்வந்த் சிங் பண்ணுன் என்ற காலிஸ்தான் பயங்கரவாதியை அமெரிக்காவில் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இந்தியா மிகப்பெரிய பங்கு வகித்ததாகவும், அமெரிக்க அதிகாரிகள் கொலை முயற்சியை முறியடித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த கொலையை நிகழ்த்துவதற்கு, […]

நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவரை இந்தியா கொல்ல திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிகழ்வு, நிஜார் கொலை வழக்கில் கனடாவின் குற்றச்ச்சாட்டை உறுதி செய்வது போல் அமைந்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், குர்பந்த்வந்த் சிங் பண்ணுன் என்ற காலிஸ்தான் பயங்கரவாதியை அமெரிக்காவில் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இந்தியா மிகப்பெரிய பங்கு வகித்ததாகவும், அமெரிக்க அதிகாரிகள் கொலை முயற்சியை முறியடித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த கொலையை நிகழ்த்துவதற்கு, இந்திய அமெரிக்கர் நிகில் குப்தாவுக்கு ஒரு லட்சம் டாலர் பணம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, நிகில் குப்தா கைது செய்யப்பட்டுள்ளார். இதனை கனடா பிரதமர் மேற்கோள் காட்டி, நிஜார் கொலை வழக்கிலும் இந்தியா இதுபோலவே நடந்து கொண்டதாக பேசி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu