சியாட்டில் கோர்ட்டு டிரம்பின் உத்தரவை 14 நாட்களுக்கு தற்காலிகமாக தடை செய்ய உத்தரவிட்டது.
அமெரிக்க குடியுரிமை இல்லாத பெற்றோரிடம் கிரீன் கார்டு இல்லாவிட்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அமெரிக்க குடியுரிமை கிடைக்காது என்று டிரம்ப் அறிவித்தார். இந்த உத்தரவு பிப்ரவரி 20 முதல் அமலுக்கு வரும் என்று அவர் கூறினார். இதனை எதிர்த்து வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் ஆகிய மாகாணங்களின் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கின் விசாரணையின் போது, சியாட்டில் கோர்ட்டு டிரம்பின் உத்தரவை 14 நாட்களுக்கு தற்காலிகமாக தடை செய்ய உத்தரவிட்டது. நீதிபதி, டிரம்பின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானதாக கூறி, இதனால் அமெரிக்க குடியுரிமை சட்டங்களை மறுவரையறை செய்யும் முயற்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.