அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குடியுரிமை பெறுவதற்கான விதிகளில் சாதகமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கிரீன் கார்டு பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்க தங்க விசா நடைமுறை எளிமை செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய மாற்றங்களின்படி, முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது வாழ்க்கைத் துணை மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கும் கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. அத்துடன், அமெரிக்க நிறுவனத்தில் 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்யவும் இயலும். இந்த முதலீடு, இதர முதலீடுகளை ஈர்க்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படும்.
இந்த ஆண்டில் கொண்டுவரப்பட்ட இபி 5 என்ற ஒருமைப்பாட்டு சட்ட திருத்தம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வழக்கத்தில் இருக்கும். அத்துடன், 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்கு முன்னர் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு, இந்த திட்டம் காலாவதி ஆனாலும், தங்க விசா நடைமுறை செயல்படுத்தப்படும். இதனால், அவர்களுக்கு உரிய நேரத்தில் அமெரிக்காவின் கிரீன் கார்டு வழங்கப்படும். மேலும், கிரீன் கார்டு விண்ணப்பத்தை செலுத்திய பின்னர், அதற்கான காத்திருப்பு நேரத்தில், முதலீட்டாளர்கள் அமெரிக்காவில் தங்கி இருந்து படிக்கவும், பணி செய்யவும் இந்த இபி5 திட்டம் அனுமதி வழங்குகிறது. அத்துடன், முதலீட்டாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இந்த மாற்றங்களால் பல வெளிநாட்டினர் பயனடைவர்.