அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 300-க்கும் அதிகமானோரை பனாமா நாட்டில் உள்ள ஹோட்டலில் காவல்துறையினர் பாதுகாப்புடன் தங்கவைத்துள்ளனர். இந்த நிலையில், "எங்களை காப்பாற்றுங்கள்" என அவர்கள் உதவி கோரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவில் இருந்து நேரடியாக நாடு கடத்த சிக்கல் இருப்பதால், பனாமா வழியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பனாமாவில் தங்கவைக்கப்பட்டுள்ள 300 பேரில் 171 பேர் சொந்த நாடுகளுக்கு திரும்ப ஒப்புக்கொண்ட நிலையில், மீதமுள்ள 40% பேர் வேறு நாடுகளுக்கு செல்ல கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அந்த நாடுகள் அனுமதி வழங்கவில்லை. பனாமா அரசு, "அவர்களை பாதுகாப்பு கருதி தங்க வைத்துள்ளோம்" என தெரிவித்துள்ளதுடன், உணவு மற்றும் மருத்துவ செலவுகளை அமெரிக்கா ஏற்கும் என்றும் கூறியுள்ளது. இந்திய தூதரகம், பனாமாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்துள்ளது.