ரஷ்யாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே அது ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது. சமீபத்தில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதற்கு ரஷ்ய அதிபர் புதின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா கருத்து கூறியிருந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நவால்னி மனைவி சந்தித்து ஆறுதல் கூறினார். மறைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவின் தொழில் துறையை பாதிக்கும் வகையில் பல புதிய பொருளாதார தடைகளை விதிக்க ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் உட்பட 500 இலக்குகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் கூறும்போது, நவால்னி சிறை வாசத்துடன் தொடர்புடைய நபர்கள் ரஷ்யாவின் பாதுகாப்பு, நிதி, தொழில் துறைகள் உள்ளிட்டவை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது. ரஷ்ய போருக்கு ஆதரவாக உள்ள 100 நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கிறோம் என்றார். அதோடு சீனா போன்ற சில நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.