அணு ஆயுத உற்பத்தி மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணங்களுக்காக ஈரானுக்கு தடை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஈரான் தலைநகர் கடந்த ஆண்டு ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி இளம் பெண் மாஷா அமினி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் விசாரணையின் போது மர்ம முறையில் இறந்தார். இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. இதில் போராளிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் ஈரான் பயங்கரமான அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் ஈரானுக்கு எதிராக அணு ஆயுத உற்பத்தி மற்றும் மனித உரிமைகள் மீறல் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்நாடு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன்படி நாடாளுமன்றத்தில் 403 எம்பிக்கள் ஆதரவுடன் ஈரான் மீது தடை விதிக்க இரண்டு மசோதாக்கள் வரையறுக்கப்பட்டது. செனட் சபை ஒப்புதல் பெற்ற பிறகு அந்த மசோதாக்கள் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. அதோடு ஈரானின் அணு ஆயுதங்கள் ஏற்றுமதிக்கு தடை, ஈரான் அதிபர் உள்ளிட்ட தலைவர்களுக்கு தடை போன்றவற்றிற்கும் ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.