ஈரான் ஆதரவுக் குழுவினா் மீது அமெரிக்கா தாக்குதல்

February 3, 2024

ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் ஆதரவு பெற்ற ஆயுத குழுக்கள் ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் உள்ளன. இந்த குழுவினர் அவ்வப்போது அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு […]

ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் ஆதரவு பெற்ற ஆயுத குழுக்கள் ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் உள்ளன. இந்த குழுவினர் அவ்வப்போது அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்து இருந்தது. இதற்கு தொடர் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்கா கூறியிருந்தது.

இந்நிலையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுத குழுக்களை குறி வைத்து அமெரிக்கா 12க்கும் மேற்பட்ட இடங்களில் திடீரென்று தாக்குதல் நடத்தியுள்ளது. நீண்ட தூரம் சென்று தாக்கும் குண்டுகளை பயன்படுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், அமெரிக்க வீரர்களுக்கு தீங்கு விளைவித்தால் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றார். இந்த தாக்குதல் இறையாண்மை மீறல் என ஈராக் கண்டனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu