சைபர் தாக்குதல் காரணமாக லாஸ் ஏஞ்சல்சில் உள்ள நீதிமன்றம் மூடப்பட்டது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இங்கு மொத்தம் 36 விசாரணை நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் அங்குள்ள கணினிகளில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து கணினிகளும் முடங்கின. இதையடுத்து பொதுமக்களின் தரவு பாதுகாப்பு கருதி நீதிமன்றம் உடனடியாக மூடப்பட்டது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் மிகப்பெரிய விசாரணை நீதிமன்றத்தில் இவ்வாறு சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் கடந்த வாரம் நடந்த மைக்ரோசாப்ட் மென்பொருள் செயல் இழப்புடன் இது தொடர்புடையது அல்ல என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.