ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து சோமாலியா மீது அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. கிழக்கு ஆப்பிரிக்காவின் சோமாலியாவில், அல் ஷபாப், ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களை ஒழிக்க சோமாலிய பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், அமெரிக்க ராணுவமும் அவர்களுக்கு ஆதரவாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு […]

ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து சோமாலியா மீது அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

கிழக்கு ஆப்பிரிக்காவின் சோமாலியாவில், அல் ஷபாப், ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களை ஒழிக்க சோமாலிய பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், அமெரிக்க ராணுவமும் அவர்களுக்கு ஆதரவாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றபின் ஆப்பிரிக்காவில் அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu