அமெரிக்க ராணுவத்தின் சார்பில் ரகசிய விண்வெளி திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதன் பகுதியாக, X 37B என பெயரிடப்பட்ட விண்கலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த டிசம்பர் 28ஆம் தேதி, டெக்ஸாஸில் உள்ள நாசாவின் கென்னடி ஏவுதளத்தில் இருந்து இது ஏவப்பட்டது. முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த இந்த ராக்கெட் ஏவும் முயற்சி, 2 வாரங்களுக்கு பிறகு நேற்று மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ரகசிய விண்வெளி திட்டமான இது, குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என கருதப்படுகிறது. மேலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சக்திவாய்ந்த பால்கன் ராக்கெட் மூலம் இது செலுத்தப்பட்டுள்ளதால், பூமியின் குறைவான சுற்றுவட்ட பாதையைத் தாண்டி கூடுதல் உயரங்களுக்கு செல்லும் என ஊகிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மனிதர்கள் யாரும் விண்ணிற்கு அனுப்பப்படவில்லை. இவை தவிர, இந்த திட்டம் குறித்த பிற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.