அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஆசிய கடல் பகுதியில் நிறுத்தப்பட்டது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதமாக போர் நீடித்து வருகிறது. உலக நாடுகள் தங்கள் நிலைப்பாடுகளை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்கு ஆசிய கடல் பகுதியில் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வந்துள்ளது. இந்த செய்தியை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு இந்த செயல் எச்சரிக்கையாக அமையும். இஸ்ரேல் போர் மேலும் தீவிரம் அடைவதை தடுப்பதற்கு பிடென் அரசு முயற்சி செய்து வருகிறது அதனால் இந்த நீர்மூழ்கி கப்பல் கொண்டுவரப்பட்டுள்ளது. கெய்ரோ நகரின் வடகிழக்கில் உள்ள அல் சலாம் பாலத்தின் கீழ் உள்ள சூயஸ் கால்வாயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு 2 விமானம் தாங்கி கப்பல்களுடன் படையினர் முன்பே தயார் நிலையில் உள்ளனர். இப்போது இவர்களுடன் இந்த கப்பல் இணைந்துள்ளது. இந்த கப்பல் அதிக திறன் பெற்ற 154 தோமா ஹாக் ரக ஏவுகணை ஏந்தி செல்லக்கூடியதாகும். அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.