அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,புதிய தேர்தல் விதிமுறைகள் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நாட்டில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். இதில், வாக்காளர் பதிவுக்கு குடியுரிமை சான்று, போதுமான ஆவணங்கள் உள்ளடங்க வேண்டும். அனைத்து வாக்குச்சீட்டுகளும் தேர்தல் நாளுக்குள் பெறப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கூட்டாட்சி தேர்தல்களில் வாக்களிக்கும் தகுதிக்கு, பாஸ்போர்ட் போன்ற குடியுரிமை சான்றிதழ் கட்டாயமாக இருக்க வேண்டும். தேர்தல் நாளுக்குப் பிறகு தபால் வாக்குச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மேலும், வாக்காளர் பட்டியல்கள் மாகாணங்களுடன் பகிரப்படும்.