ஹவுதி தளபதி மீது அமெரிக்கா, இங்கிலாந்து பொருளாதார தடை

February 29, 2024

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையின் முக்கிய தளபதி மீது இங்கிலாந்தும், அமெரிக்காவும் பொருளாதார தடை விதித்துள்ளது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை அமெரிக்காவும், இங்கிலாந்தும் எதிர்த்து அவ்வப்போது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சி படையின் முக்கிய படைத் தளபதி மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் பொருளாதார தடை அறிவித்துள்ளன. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் […]

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையின் முக்கிய தளபதி மீது இங்கிலாந்தும், அமெரிக்காவும் பொருளாதார தடை விதித்துள்ளது

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை அமெரிக்காவும், இங்கிலாந்தும் எதிர்த்து அவ்வப்போது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சி படையின் முக்கிய படைத் தளபதி மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் பொருளாதார தடை அறிவித்துள்ளன. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் ஏமன் நாட்டு ஹவுதி படையின் முக்கிய தளபதி இப்ராஹிம் அல் நஷீரி மீது அமெரிக்காவும் இங்கிலாந்தும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதோடு ஈரானின் துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சி படையின் துணை தளபதி முகமது ரேசா பலாஸ்தே மீதும் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹவுதி அதிகாரிகளுக்கு பொருள்களைக் கொண்டு சென்ற ஹாங்காங்கை சேர்ந்த கேப் டிஸ், கோஹானா ஆகிய நிறுவனங்களும் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பொருளாதார தடைகள் மூலம் சர்வதேச வர்த்தக வழிதடத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் உறுதியாக உள்ளது நிரூபணம் ஆகியுள்ளது என்று மேத்யூ கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu