ஈரானிடமிருந்து பறிமுதல் செய்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க ராணுவத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது, சட்டவிரோதமாக கடத்தி செல்லப்பட்ட ஈரான் ஆயுதங்களை உக்ரைன் ராணுவம் பயன்படுத்த அனுப்பியுள்ளோம். இந்த ஆயுதங்கள் கடந்த 2021 மே முதல் 2023 பிப்ரவரி வரை எந்த நாடும் சொந்தம் கொண்டாடாத கப்பல்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகும். இந்த ஆயுதங்கள் ஏப்ரல் நான்காம் தேதி உக்ரைனுக்கு அனுப்பப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏ கே 47 துப்பாக்கிகள், ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், ஆர்பிஜி 7 ஆயுதங்கள், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட 7.62 என்.எம் குண்டுகள் ஆகியவை அடங்கும். இந்த ஆயுதங்கள் ரஷ்ய போருக்கு எதிராக உதவும் என்று கூறப்பட்டுள்ளது.