கடந்த ஜூலை மாதத்தில், வடகொரியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க ராணுவ வீரர் சிறைபிடிக்கப்பட்டார். அவர் தற்போது சொந்த நாட்டிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.ட்ராவிஸ் கிங் என்ற அமெரிக்க ராணுவ வீரர், தென்கொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு சிறைபிடிக்கப்பட்ட அவர், 2 மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருந்தார். அதற்குள்ளாக, கடந்த ஜூலை மாதத்தில், வடகொரிய எல்லைக்குள் சட்டவிரோதமாக அவர் நுழைந்தார். அமெரிக்காவில் கருப்பின பாகுபாடு உள்ளதால், வடகொரியாவுக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது, அவரை மீண்டும் அமெரிக்காவிடம் வடகொரியா ஒப்படைத்துள்ளது.