வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை பரிசோதித்தது. அதற்கு மறுநாள் தென் கொரியாவும் அமெரிக்காவும் ௯ட்டு இராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளது.
வட கொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியா அதன் போர்நிறுத்தக் கோட்பாடுகளை தி௫த்தியது. அத்துடன் ஆயுதங்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்று உறுதிபூண்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையும் நடத்தியது. இவை அனைத்தும் தென்கொரியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவானது தென்கொரியாவின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளியாகும். அமெரிக்காவும் தென் கொரியாவும் 2018 ஆம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்கிறது. கோவிட்-19 காரணமாக அது நிறுத்திவைக்கப்பட்டி௫ந்தது. தற்போது
புதிதாக பதவியேற்ற தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக்-யோல், அமெரிக்காவுடன் கூட்டு இராணுவ பயிற்சிகளை மீண்டும் மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.
அதுமட்டுமின்றி அமெரிக்காவானது, தென்கொரியாவை வடகொரியாவின் அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பாதுகாக்க தென் கொரியாவில் சுமார் 28,500 துருப்புக்களை நிறுத்தியுள்ளது.
இது குறித்து கப்பற்படையானது தனது அறிக்கையில், 4 நாள் திட்டமிடப்பட்ட இப்பயிற்சியில் போர் நடவடிக்கைகள், பிற கடல்சார் நடவடிக்கைகள் பற்றிய பயிற்சிகள் நடைபெறும். அத்துடன் இதில் 20 க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் சில போர் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் வட கொரியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காகவும், தென் கொரியா-அமெரிக்க கூட்டணியின் வலுவை நிரூபிக்கவும் இந்த பயிற்சி திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.