நிலவில் கால் பதித்த சில நாட்களிலேயே அமெரிக்காவின் ஒடிசியஸ் விண்கலம் தனது செயல்பாடுகளை நிறுத்தி உள்ளது.
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, அமெரிக்காவின் தனியார் விண்கலமான ஒடிசியஸ் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இந்த நிலையில், நேற்றுடன் இதன் செயல்பாடுகள் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, ஒடிசியஸ் எடுத்த புகைப்படம் ஒன்றை அனுப்பியதும், அதிலிருந்த எரிசக்தி முழுவதுமாக தீர்ந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இது நீண்ட உறக்க நிலைக்கு சென்றுள்ளது என இன்டியூட்டிவ் மெஷின்ஸ் செய்தி தொடர்பாளர் ஜோஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார். நெடுநாட்களுக்கு பிறகு, மீண்டும் எரிசக்தி கிடைக்கும் சமயத்தில், விண்கலத்துடன் தொடர்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்குவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.