அமெரிக்கா மத்திய சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத முகாம்களை தாக்குவதற்காக பி 52, எப் 15 எஸ், ஏ-10 எஸ் போர் விமானங்களை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
சிரியா கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. 24 ஆண்டுகளாக அதிபராக இருந்த அல்-அசாத் நாட்டை விட்டு தப்பி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில், 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' கிளர்ச்சியாளர்கள் சிரியாவுக்குள் சென்றுள்ள நிலையில், சிரியா பிரதமர் முகமது காசி ஜலாலி ஒரு வீடியோ பதிவில், எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து இடைக்கால அரசை நிறுவ தயாராக இருப்பதாக கூறினார். கிளர்ச்சி குழுவின் தலைவர்களை தொடர்பு கொண்டு, அடக்குமுறைகள் இருக்காது என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், அமெரிக்கா மத்திய சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத முகாம்களை தாக்குவதற்காக பி 52, எப் 15 எஸ், ஏ-10 எஸ் போர் விமானங்களை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது.














