இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா அதிக உயரத்தில் ராக்கெட்களை அழிக்கக்கூடிய புதிய சாதனத்தை வழங்கவுள்ளது.
ஈரானின் ராக்கெட் தாக்குதல்களை எதிர்கொள்ள மற்றும் இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா அதிக உயரத்தில் ராக்கெட்களை அழிக்கக்கூடிய புதிய சாதனத்தை வழங்கவுள்ளது. இது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் அடிப்படையில் பாதுகாப்பு துறை மந்திரி லாய்ட் ஆஸ்டினால் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இஸ்ரேல் வான்பாதுகாப்புக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்தச் செய்தியை தொடர்ந்து, ஈரான் ஞாயிற்றுக்கிழமை 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், அமெரிக்கா தனது படைகளை இஸ்ரேலுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.