யேமெனில் இங்கிலாந்தும் அமெரிக்காவும் கூட்டாக நடத்திய வான் தாக்குதலில் 16 பேர் பலியாகி உள்ளனர்.
இது குறித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறுகையில், அமெரிக்க-இங்கிலாந்து படையினர் ஹுதைத்தா பகுதியில் உள்ள வானொலி அலுவலகம் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு மீது கூட்டாக வான்வழி தாக்குதல் நடத்தியதில் 16 பேர் பலியாகி உள்ளனர். 35 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் பொது மக்கள் என்று ஹவுதி கூறினர்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெறும் போரில் ஹமாசுக்கு ஆதரவாக யேமெனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். இவர்கள் செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களின் திறனை குறைக்க யேமெனில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட்டாக வான் தாக்குதல் நடத்தி வருகின்றன.