ஈரான் அதிபர் இப்ராஹிம் ராய்சி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்த பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அவரது வருகை மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இருதரப்பு வர்த்தகத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் சர்வதேச அளவில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், பாகிஸ்தான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் நாட்டுடன் இணைந்து எந்த நாடு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டாலும், அந்த நாட்டிடம் பொருளாதார தடை நிறைவேற்றப்படும் என அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.