உதகை ரோஜா மலர் கண்காட்சி மே 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 19வது ரோஜா கண்காட்சி மே பத்தாம் தேதி அன்று தொடங்கியது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேலான ரோஜா மலர்களைக் கொண்டு பல வகையான அலங்கரிக்கப்பட்டிருந்தது இக்கண்காட்சியை காண இதுவரை 70,000 மேற்பட்ட பொதுமக்கள் வந்துள்ளனர். 10 நாட்கள் முடிவடைந்த நிலையில் நேற்றுடன் ரோஜா கண்காட்சி முடிவடைந்தது.இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பால் மே 22 ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி நீட்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது