சண்டிகரில் இருந்து திப்ரூகர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் நேற்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
உத்திரபிரதேசம் மாநிலம், சண்டிகரில் இருந்து திப்ரூகர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் கோண்டா பகுதியில் சென்ற போது திடீரென்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தது. இதில் நான்கு பயணிகள் பலியாகினர் என்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் விபத்து நடந்த பகுதிக்கு 40க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்று அங்கு பயணிகளை மீட்டு வருகின்றனர்
இந்நிலையில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 2.5 லட்சம் மற்றும் சிறுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 இழப்பீடாகவும் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.