உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில், நேற்று காலை 35 பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஒரு கொடூர விபத்துக்குள்ளானது. இதில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.