உத்தரகாண்டின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
உத்தரகண்ட் மாநிலத்திற்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டேராடூன் மற்றும் டெல்லி இடையே இயக்கப்படும். இது டெல்லிக்கு இயக்கப்படும் ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகும். இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் 314 கிமீ தூரத்தை நான்கு மணி நேரம் 45 நிமிடங்களில் கடக்கும் என்றும், புதன்கிழமை தவிர வாரத்தின் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.