உஸ்பெகிஸ்தானின் தலைநகரான சமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாடு இம்மாதம் 15 முதல் 16 வரை நடைபெற உள்ளது.
இந்த நகரமானது பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட 15 உலகத் தலைவர்களை பெ௫மைபடுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. SCO உச்சிமாநாட்டை 4வது முறையாக நடத்துகிறது. ஆனால் சமர்கண்ட் நகரில் உச்சிமாநாடு நடப்பது இதுவே முதல் முறையாகும். இதற்காக சமர்கண்ட் நகரில், ஒரு மணி நேரத்திற்கு 800 பேரையும் வாரத்திற்கு 120 விமானங்களையும் கையாளும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்ட லக்கேஜ் செக்-இன் அமைப்புடன் ௯டிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு விருந்தினர்களை வரவேற்பதற்காக பல நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. அதற்காக 135 ஹெக்டேர் பரப்பளவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் விருந்தினர் தங்குவதற்காக, சுமார் 1,200 அறைகளுடன் 8 சர்வதேச அளவிலான ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளது.