பொறியியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்தான அறிவிப்பு ஜூலை இரண்டாவது வாரத்தில் வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 470க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு முறையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மே 14ஆம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு மூலம் தொடங்கியது. அதில் இதுவரை 2 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ள நிலையில் ஜூன் 6-ம் தேதியுடன் அவகாசம் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஒதுக்கீடு, தரவரிசை பட்டியல் வெளியீடு, ஆன்லைன் கலந்தாய்வு, ஒதுக்கீட்டு ஆணை போன்ற பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. இதில் இந்த ஆண்டு கலந்தாய்விற்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து ஜூலை இரண்டாவது வாரத்தில் பட்டியல் தருவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதில் கடந்த ஆண்டு பொது கலந்தாய்வுக்கு இரண்டு லட்சத்து 20 இடங்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு புதிய கல்லூரிகள் மற்றும் புதிய இடங்களுக்கு எண்ணிக்கை அதிகரிக்குமா என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டியலின் பிறகு தெரியவரும்