தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 35வது சிறப்பு மெகா கோவிட்- 19 தடுப்பூசி முகாமில் 12.28 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50000 சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நேற்று நடைபெற்றன. இதுவரை நடைபெற்ற 34 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 10 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.
12-14 வயதுயுடைவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் 16-03-2022 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை 19,76,537 பேருக்கு முதல் தவணையும் 14,98,193 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 15-17 வயதுயுடையவர்களுக்கு 03-01-2022 தொடங்கப்பட்டது. இதுவரை 30,50,267 பேருக்கு முதல் தவணையும் 25,81,517 பேருக்கு இரண்டாம் தவணையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை வழங்கும் திட்டம் 10-01-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை மொத்தம் 70,41,453 பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.