12.5 லட்சம் மருந்தாளுநருக்கு தடுப்பூசி போடும் பயிற்சி தொடங்கவுள்ளது

January 24, 2023

இந்தியாவில் 12.5 லட்சம் மருந்தாளுநருக்கு தடுப்பூசி போடும் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கவுள்ளது. இந்தியாவில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இவர்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்திய மருந்து கழகம் (ஐபிஏ) மருந்தாளுநர்களுக்கு தடுப்பூசி போடும் பயிற்சி திட்டத்தை தொடங்க உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் தடுப்பூசி போடுபவர்களின் பங்களிப்பை 12.5 லட்சமாக அதிகரிக்க ஐபிஏ இலக்கு நிர்ணயித்துள்ளது. 2023 […]

இந்தியாவில் 12.5 லட்சம் மருந்தாளுநருக்கு தடுப்பூசி போடும் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கவுள்ளது.

இந்தியாவில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இவர்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்திய மருந்து கழகம் (ஐபிஏ) மருந்தாளுநர்களுக்கு தடுப்பூசி போடும் பயிற்சி திட்டத்தை தொடங்க உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் தடுப்பூசி போடுபவர்களின் பங்களிப்பை 12.5 லட்சமாக அதிகரிக்க ஐபிஏ இலக்கு நிர்ணயித்துள்ளது.

2023 மே மாதம் தொடங்கும் பயிற்சியில் பங்கேற்கும் மருந்தாளுநர்களுக்கு 15 நாட்களுக்கு ஆன்லைன் பயிற்சியும், அதனைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் 15 நாட்கள் நேரடி பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்று தேர்ச்சி பெறும் மருந்தாளுநர்களுக்கு ஐபிஐ மற்றும் உலக சுகாதார அமைப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu