தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதில் இன்று காலை நிலவரப்படி 69.09 அடியாக அணையின் நீர்மட்டம் இருந்தது. அணைக்கு
12955 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3169 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் இன்று மதியத்திற்குள் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட ஐந்து மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் உள்ள மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.