படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இவற்றிற்கான மாதிரி வரைபடங்களை இந்திய ரயில்வே துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.இந்தியாவில் இதுவரை 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் கோவை- சென்னை மற்றும் திருநெல்வேலி- நெல்லை வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இவை முழுவதும் பகல் நேர சேவையாக இருப்பதால் இதுவரை அமரும் வசதி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில் 16 பெட்டிகளில், பணியாளர்களுக்கு 34 படுக்கைகளும், பயணிகளுக்கு 823 படுக்கைகள் என மொத்தம் 857 படுகைகள் இடம் பெற உள்ளன. மேலும் இதில் சிறப்பம்சமாக ஷாக் அப்சார்பர்கள்,மின் விளக்குகள், இரண்டு படுக்கைகளுக்கிடையே போதிய இடைவெளி, படிக்கட்டு வசதி என பல்வேறு நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளன. இது அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் சோதனை ஓட்டத்திற்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.