வருகிற 8-ந் தேதி முதல் செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கம்

March 27, 2023

செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் வருகிற 8-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க மத்திய ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த ரெயில் வரும் ஏப்ரல் 8-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. ஐதராபாத்-திருப்பதி இடையே நாராயணாத்ரி எக்ஸ்பிரஸ் செல்லும் பாதையில் வந்தே பாரத் ரெயிலை இயக்க தென் மத்திய ரெயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. செகந்திராபாத்-விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரெயில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ரெயிலுக்கு […]

செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் வருகிற 8-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.

செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க மத்திய ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த ரெயில் வரும் ஏப்ரல் 8-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. ஐதராபாத்-திருப்பதி இடையே நாராயணாத்ரி எக்ஸ்பிரஸ் செல்லும் பாதையில் வந்தே பாரத் ரெயிலை இயக்க தென் மத்திய ரெயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செகந்திராபாத்-விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரெயில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ரெயிலுக்கு பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு மாநிலத்திற்கு ஒரு வந்தே பாரத் ரெயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆந்திரா- தெலுங்கானா இடையே 2-வது வந்தே பாரத் ரெயிலை இயக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu