படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் - இந்திய ரெயில்வே திட்டம்

December 21, 2022

படுக்கை வசதியுடன் கூடிய 200 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடி செலவில் வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டு டெல்லி-வாரணாசி, டெல்லி-கத்ரா இடையே இயக்கப்படுகிறது. இந்நிலையில் தலா 16 பெட்டிகளுடன் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரெயிலில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 11, 2 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் […]

படுக்கை வசதியுடன் கூடிய 200 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடி செலவில் வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டு டெல்லி-வாரணாசி, டெல்லி-கத்ரா இடையே இயக்கப்படுகிறது. இந்நிலையில் தலா 16 பெட்டிகளுடன் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

வந்தே பாரத் ரெயிலில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 11, 2 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 4, ஒரு முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி என மொத்தம் 16 பெட்டிகள் இடம்பெறுகிறது. படுக்கை வசதி கொண்ட 200 வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ரெயில்வே துறை டெண்டர் அழைப்பு விடுக்கிறது. இவை சென்னை ஐ.சி.எப். மற்றும் மராட்டிய மாநிலம் லத்தூரில் உள்ள மராத்வாடா தொழிற்சாலை ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu