கோவை - பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவை - சென்னை, சென்னை - நெல்லை, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா போன்ற பகுதிகளுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பெங்களூருவுக்கு எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட சில ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. போதுமான ரயில் சேவைகள் இல்லாததால் கோவை - பெங்களூர் இடையே ரயில்களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் சேலம் கோட்டத்துக்கு 8 பெட்டிகள் கொண்ட ராக் வந்துள்ளது. இதனால் இந்த மாத இறுதிக்குள் அல்லது புத்தாண்டின் தொடக்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க எனவும் ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது என கூறப்படுகிறது. இதற்காக முறையான அறிவிப்பு வெளிவரும் என எதிர்ப்பார்க்க படுகிறது.