மைசூர் - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

November 11, 2022

மைசூர் - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய அதிவேக ரயில்களை 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரயில்வே அமைச்சகம் கடந்த 2019ல் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மைசூர் - சென்னை இடையிலான 5வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயிலை 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். சென்னை சென்ட்ரல் - மைசூரு […]

மைசூர் - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய அதிவேக ரயில்களை 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரயில்வே அமைச்சகம் கடந்த 2019ல் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மைசூர் - சென்னை இடையிலான 5வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயிலை 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும்.

சென்னை சென்ட்ரல் - மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாரத்தில் 6 நாட்கள் 2 முனைகளிலிருந்தும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு மைசூரு சென்றடையும். பிறகு மைசூரில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மாலை 7.35க்கு சென்னை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu