செப்டம்பர் 24ஆம் தேதி முதல் நெல்லை- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருக்கிறது.நெல்லை- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். அன்று காலை 11:30 மணியளவில் நெல்லையிலிருந்து சென்னைக்கு தனது பயணத்தை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் நெல்லை சந்திப்பு நிலையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தினமும் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்னையை சென்றடையும். பின்னர் சென்னையில் இருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லையை சென்றடையும். இதற்கான சோதனை ஓட்டம் நாளை நடைபெறுகிறது.