வேதாந்தா நிறுவனம், 2 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கடனில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த வருடத்திற்குள் இந்த கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே, முதலீட்டாளர்களின் உதவியைப் பெற, வேதாந்தா நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேதாந்தா நிறுவனம் முதலீட்டாளர்களை சந்திப்பதற்கு இடையில், சில நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. ஜேபி மோர்கன், ஸ்டாண்டர்ட் சார்ட்டட் போன்ற நிறுவனங்களின் பெயர்கள் இதில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அடுத்த வாரம் முதலீட்டாளர்களுடன் வேதாந்தாவின் சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.