நவராத்திரி சமயத்தில் வாகன விற்பனை 57% உயர்வு - வாகன டீலர்கள் சங்கம் அறிவிப்பு

October 11, 2022

இந்த வருடத்தின் நவராத்திரி பண்டிகையின் போது, இந்தியாவின் சில்லறை வாகன விற்பனை 57% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவராத்திரி சமயத்தில் மட்டுமே, 5.4 லட்சம் வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன. இந்த விவரங்களை வாகன டீலர்கள் சங்கம் (FADA) தெரிவித்துள்ளது. சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை, 539227 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த வருட நவராத்திரி பண்டிகையின் போது 342459 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, […]

இந்த வருடத்தின் நவராத்திரி பண்டிகையின் போது, இந்தியாவின் சில்லறை வாகன விற்பனை 57% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவராத்திரி சமயத்தில் மட்டுமே, 5.4 லட்சம் வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன. இந்த விவரங்களை வாகன டீலர்கள் சங்கம் (FADA) தெரிவித்துள்ளது. சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை, 539227 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த வருட நவராத்திரி பண்டிகையின் போது 342459 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, வாகன விற்பனையில் 57% வளர்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நவராத்திரி பண்டிகையின் போது, 466128 வாகனங்கள் விற்பனையாகி இருந்ததே, உச்சபட்ச பண்டிகைக் கால வாகன விற்பனையாக இருந்தது. அதனை இந்த வருட நவராத்திரி விற்பனை முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து பேசிய வாகன டீலர்கள் சங்கத்தின் தலைவர் மனிஷ் ராஜ் சிங்கானியா, “மூன்று வருடங்களுக்குப் பிறகு, மக்கள் மீண்டும் வாகனம் வாங்குவதில் களமிறங்கியுள்ளனர். கொரோனா பரவலுக்குப் பின்னர், இருசக்கர வாகனத் துறை பெரும் சரிவை சந்தித்து வந்தது. இந்த வருடத்தில் இருசக்கர வாகன துறையும் ஒற்றை இலக்க வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது” என்று கூறினார்.

இந்த வருட நவராத்திரி பண்டிகை காலத்தில், இருசக்கர வாகனங்களின் சில்லறை விற்பனை 369020 ஆக இருந்தது. முந்தைய ஆண்டை விட இது 52.35% கூடுதல் ஆகும். அத்துடன், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3.7% கூடுதலாகும். கடந்த வருட நவராத்திரியின் போது, மொத்த பயணிகள் வாகன விற்பனை 64850 ஆக இருந்தது. தற்போது இது 70.43% உயர்ந்து, 110521 ஆக உள்ளது. அதே வேளையில், சரக்கு வாகன விற்பனை, 15135ல் இருந்து 48.25% உயர்ந்து 22437 ஆக பதிவாகியுள்ளது.

மூன்று சக்கர வாகனங்களை பொறுத்தவரை, கடந்த வருட நவராத்திரியின் போது 9203 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. இந்த வருடம் 19809 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. குறிப்பாக டிராக்டர்கள் விற்பனையில் 57.66% வளர்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த வருடத்தில் 11062 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் 17440 டிராக்டர்கள் விற்பனையாகி உள்ளன. இவ்வாறு அனைத்து வாகன விற்பனைப் பிரிவிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. எனவே, “நவராத்திரி பண்டிகையில், அதிகரித்துள்ள வாகன விற்பனை, இனி வரும் தீபாவளி பண்டிகையிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வாகன விற்பனை துறைக்கு இந்த பண்டிகைக் காலம் சிறப்பாக அமைந்துள்ளது” என்று சிங்கானியா தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu