தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூபாய் 2.39 கோடி ரூபாய் அபராதம் வாகன விதி மீறலில் ஈடுபட்டதற்காக வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையின் கீழ் 12 மண்டலங்களை சேர்ந்த போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். சோதனையில் சுமார் 11,239 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. அதில் விதிகளை மீறும் விதமாக அதிக பயணிகளை ஏற்றியது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல வழக்குகளின் கீழ் 2,281 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் நிலுவை வாரியாக ரூபாய் 28.49 லட்சம், விதிமீறல் அபராதமாக ரூபாய் 2.11 கோடியை சேர்த்து மொத்தம் ரூபாய் 2.39 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.