மூத்த பத்திரிகையாளர் வி.என் சாமிக்கு 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கடந்த 06.09.2021 அன்று சமூக மேம்பாட்டிற்காகவும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் சிறந்த பங்காற்றி வரும் இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ஐந்து லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான விருது மூத்த பத்திரிக்கையாளர் சண்முகநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டுக்காக பல ஆண்டுகள் பணியாற்றி பெற்றுள்ள நீண்ட அனுபவங்களையும், தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளையும் பாராட்டி 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி அவர்களுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த விருதானது ரூபாய் 5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் கொண்டுள்ளது.