இந்தியாவில் இன்னும் ஆறு மாதங்களுக்குள் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த வோடபோன் ஐடியா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஆறு மாதங்களுக்குள் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த தகவல் தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா திட்டமிட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி அக்ஷயா மூந்த்ரா கூறுகையில், இந்தியாவில் இணைய சேவைகளை விரிவுபடுத்துவதற்காக இன்னும் மூன்று ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடி முதல் 55 ஆயிரம் கோடி வரை கூடுதல் முதலீடு செய்ய உள்ளோம். தற்போது 4ஜி நெட்வொர்க் போதிய அளவில் இல்லாததால் வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றோம். எனவே அந்த நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்த உள்ளோம். அதற்குப் பிறகு நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இன்னும் ஆறு மாதங்களுக்குள் அந்த சேவை அறிமுகமாகும் என்று கூறினார்.














