2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வெற்றி கோப்பை விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐசிசி ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பு ஆண்டில் இந்தியாவில் நடைபெறுகிறது. அதற்கான கோப்பை அறிமுகம் யாரும் எதிர்பார்க்காத வகையில் விண்வெளியில் நடந்துள்ளது. பிரத்யேக பலூன் ஒன்றின் மேல் வைக்கப்பட்ட கோப்பை பூமியில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் வளிமண்டலத்தில் விளிம்பில் கோப்பை நிலை நிறுத்தப்பட்டது. இன்று முதல் 18 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் கோப்பை வரும் செப்டம்பர் 4ம் தேதி மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது.
விண்வெளியில் இருந்து நேரடியாக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கோப்பை வந்து இறங்கியது. போட்டிகள் அக் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளில் 8 அணிகள் ஏற்கனவே உறுதியாகியுள்ளது. எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. மேலும் போட்டிகளுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.