90-வது ரஞ்சி கோப்பையில் விதர்பா சாம்பியன் - 3 கோடி ஊக்கத்தொகை அறிவிப்பு

விதர்பா அணிக்கு 3 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 90-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் , விதர்பா 379 ரன்கள் எடுத்ததை அடுத்து கேரளா 342 ரன்கள் எடுத்தது. பின்னர், 37 ரன் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா 375 ரன்கள் எடுத்த போது, இரு அணிகளும் டிராவில் ஆட்டத்தை முடித்து […]

விதர்பா அணிக்கு 3 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

90-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் , விதர்பா 379 ரன்கள் எடுத்ததை அடுத்து கேரளா 342 ரன்கள் எடுத்தது. பின்னர், 37 ரன் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா 375 ரன்கள் எடுத்த போது, இரு அணிகளும் டிராவில் ஆட்டத்தை முடித்து ஒப்புக்கொண்டனர். விதர்பா முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதால், சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன் பிறகு, விதர்பா அணிக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என விதர்பா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், ஒரே சீசனில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர் ஹார்ஷ் துபேவுக்கு ரூ.25 லட்சம், இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த யாஷ் ரதோட் (960 ரன்) மற்றும் கருண் நாயர் (863 ரன்) ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை பயிற்சியாளர் உஸ்மான் கானிக்கு ரூ.15 லட்சம், உதவி பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu