விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து விக்கிரபாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து வருகிற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. 21ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் 24 ஆம் தேதி அன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுவை திரும்ப பெற 26 ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை முன்னிட்டு தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது