விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. அதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, சுயட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மனுக்கள் மீதான பரிசீலனை வருகிறது 24 ஆம் தேதியும், மனுக்கள் வாபஸ் பெறுவதற்கு 26 ஆம் தேதியும் கடைசி நாளாகும்.26 ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது