விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடையேயான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த தொகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 95,495 பேர் வாக்களித்துள்ளனர். இதனை அடுத்து வாக்கு சாவடி மையங்களில் இருந்து வாக்கு பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி
மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின் அங்குள்ள பாதுகாப்பு அறையில் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி காலை எட்டு மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப்பதிவேந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்பட உள்ளது. இந்த தொகுதியில் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. எனவே இந்த வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.