வாட்ஸ்அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்தியப் பிரிவில் இருந்து, தொடர்ச்சியாக, பல மூத்த அதிகாரிகள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில், வாட்ஸ்அப் பே இந்திய பிரிவு தலைவர் வினய் சோலட்டி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் பதவியேற்றுக் கொண்ட நான்கு மாதங்களில் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, வாட்ஸ்அப் பே -ஐ தலைமை ஏற்று நடத்த, மனிஷ் மகாத்மே கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணியமர்த்தப்பட்டார். அவர் கடந்த செப்டம்பர் மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தா நிலையில், அபிஜித் போஸ் வாட்ஸ்அப் பே -ஐ தலைமை ஏற்று நடத்தி வந்தார். அவருக்கு கீழ் வினய் சோலட்டி பணியாற்றி வந்தார். முன்னதாக, அவர் அமேசான் நிறுவனத்தின் அமேசான் பே பிரிவில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.