மணிப்பூரில் 16 நாட்களுக்கு பிறகு மீண்டும் வன்முறை வெடித்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
மணிப்பூரில் மெய்டீஸ் சமூகத்தினருக்கும், நாகா, குக்கி பழங்குடி பிரிவினருக்கும் மே 3ம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 130 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். கடந்த ஜூன் 13ம் தேதி முதல் 16 நாட்கள் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள ஹராதெல் கிராமத்தில் கலவரக்காரர்கள் நேற்று காலை திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.