திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 30-ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் ஏழுமலையான் கோவிலில் உள்ளூர், வெளியூர் வெளிநாடுகள் ஆகிய இடங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அங்கு விசேஷ நாட்கள், விடுமுறை நாட்கள், திருவிழா போன்ற நேரங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் தினமும் 20,000 பேருக்கு ரூபாய் 300 சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் விற்பனை செய்ததுடன், தினமும் 20,000 இலவச டிக்கெட்டுகளையும் வழங்கி வந்தது. இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் நாளை காலை வரை இலவச தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தான தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு ஜூன் 30-ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது